Blogger இயக்குவது.

நாகர்கோவில் நகரில் பாதாளச் சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்காவிட்டால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் - தமிழக வாழ்வுரிமை கட்சியின் குமரி மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

வியாழன், 19 பிப்ரவரி, 2015

தமிழக வாழ்வுரிமை கட்சியின் குமரி மாவட்ட செயற்குழுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் சோ. சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.பி. ராஜன், இளைஞரணித் தலைவர் ராஜா சுப்பையா, இளைஞரணிச் செயலாளர் சந்தோஷ், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் அகமது நயீம், மாவட்ட துணை துணைத் தலைவர்கள் செந்தில், கண்ணன், மாவட்ட அமைப்பு செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. நாகர்கோவில் நகரில் பாதாளச் சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்காவிட்டால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.

2. பெட்ரோல் விலையை உயர்த்தியதற்கு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது,

3. உறுப்பினர் சேர்க்கைக்காக குமரி மாவட்டத்திற்கு மார்ச் 8 ஆம் தேதி வரும் மாநில பொதுச் செயலாளர் வை. காவேரி, மாநில அமைப்புச் செயலாளர் மே.ப. காமராஜ், மாநில இணை பொதுச் செயலாளர் எம்.எஸ். சண்முகத்திற்கு வரவேற்பு அளிப்பது

உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP