Blogger இயக்குவது.

கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.அசோக்குமாரை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் ஊத்தங்கரையில் பிரசாரம்

ஞாயிறு, 30 மார்ச், 2014

கிருஷ்ணகிரி  நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.அசோக்குமாரை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் 29.03.2014 (சனிக்கிழமை) அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில்  நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

கூட்டத்துக்கு ஊத்தங்கரை அதிமுக ஒன்றிய செயலாளர் நாராயணசாமி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் பி.கே.சிவானந்தம் வரவேற்றார். ஊத்தங்கரை சட்டபேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம், மாவட்ட அண்ணா தொழில்சங்கத் தலைவர் நாகராஜ், மாநில நில வள வங்கித் தலைவர் சாகுல் அமீது, தலைவர் கிருஷ்ணன், துணைத் தலைவர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:

 
மத்தியில் 11 ஆண்டுகள் அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் வன்னியர் சமுதாயத்துக்கு ஏதும் செய்யவில்லை. எந்த தேசியக் கட்சியுடனும் கூட்டணி வைப்பதில்லை என ராமதாஸ் கூறினார். ஆனால், தற்போது பாஜகவுடன்  கூட்டணி வைத்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, இலங்கை படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு  பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனத் தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். இதனால், அவருக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்கிறேன் என்றார்.







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP