Blogger இயக்குவது.

காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்ககூடாது என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறை சார்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

 







இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்ககூடாது, தமிழர்களை இழிவு படுத்தும் மெட்ராஸ் கபே திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறை சார்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்கள் இன்று (06/09/2013) வெள்ளிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி பல்கலைக்கழக மாணவர் பாசறை செயலாளர் சி.ராம்ஜி தலைமையில் மாவட்ட மாணவரணி தலைவர் ப.மாரியப்பன், அருள் என்கிற மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் பொறியியல் புல மாணவர்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியபிரதமர் பங்கேற்க கூடாது என வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்திக்கு எதிராகவும் கோஷமிட்டு கலைந்து சென்றனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP