Blogger இயக்குவது.

அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் சார்பில் புதுவையில் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்பு

வியாழன், 3 அக்டோபர், 2013

கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும், அதற்கு எதிராகப் போராடி வரும் மக்கள் மீது போட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி புதுவையில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் புதன்கிழமை( 02.10.2013)  நடைபெற்றது. 

புதுவை பழைய பேருந்து நிலையம் அருகே திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லோகு.ஐயப்பன் தலைமை வகித்தார். 

ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநிலத் தலைவர் ஸ்ரீதர்,  மதிமுக கபிரியல், திராவிட விடுதலைக் கழகம் கோகுல்நாத், எத்திராஜ், மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன், செந்தமிழ் இயக்கம் தமிழ்மணி, மீனவர் ஐக்கிய முன்னணி விஸ்வநாதன் உள்ளிட்டோர், மத்திய, மாநில அரசிடம் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர். கூட்டமைப்பைச் சேர்ந்த பலர் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP