Blogger இயக்குவது.

அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்பு

வியாழன், 3 அக்டோபர், 2013

கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும், அதற்கு எதிராகப் போராடி வரும் மக்கள் மீது போட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் புதன்கிழமை (02.10.2013) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

இதில் மதிமுக , தமிழக வாழ்வுரிமை கட்சி சைதை சிவா , நாம் தமிழர் கட்சி, விசிக , திராவிடர் விடுதலை கழகம், தமிழ்நாடு மக்கள் கட்சி, SDPI கட்சி , மே 17 இயக்கம் , சேவ் தமிழ் இயக்கம் , தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன முழக்கம் செய்தனர். இடிந்தகரை மக்களின் மீது பல்வேறு பொய் வழக்குகள் போட்டு மாநில அரசு அராஜகம் செய்கிறது . உச்சநீதிமன்றம் போராளிகள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்ற தீர்ப்பு அளித்தும் தமிழக அரசு இன்னும் வழக்குகளை திரும்ப பெறவில்லை. இதை கடுமையாக கண்டித்து தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP