Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 04.01.2014 அன்று தஞ்சையில் நடைபெறும்

சனி, 28 டிசம்பர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஜனவரி 4ம் தேதி தஞ்சையில் நடைபெற உள்ளது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் துரை.கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அண்ணா.வினோத், பொருளாளர் ரவீந்திரநாயுடு, துணை செயலாளர் சேது அண்ணாமலை, மாநில இளைஞரணி துணை செயலாளர் முகமது ஆரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட செயலாளர் அப்பாக்கண்ணு வரவேற்றார். மாநில துணை பொதுச் செயலாளர் தஞ்சை தமிழ்நேசன் சிறப்புரையாற்றினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் பாபு, மத்திய மாவட்ட அமைப்பாளர் மோகன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் ஜோதிவேல், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் சதீஷ்குமார், திருவையாறு ஒன்றிய செயலாளர் சுயம்பு. கஜேந்திரன், நகர இளைஞரணி தலைவர் செந்தில், துணை செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், ஒன்றிய மாணவரணி செயலாளர் விக்னேஸ்வரன், மாவட்ட இளைஞரணி பொருளா
ர் கோகுல்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் முகமதுஎகியா நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:


1. தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை வரும் 4ம் தேதி தஞ்சையில் நடத்துவது,

2. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகைத்தரும் கட்சியின் நிறுவன தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகனுக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது,

3. தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, மன்னார்குடி தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4. பிப்ரவரி 2–ந் தேதி சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 3–ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு தஞ்சை மாவட்ட சார்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரளாக பங்கேற்பது

உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP