Blogger இயக்குவது.

திருப்பூர் மாவட்டம் மூலனூரில் பா.ம.க.வினர் 100 பேர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணையும் விழா

புதன், 4 டிசம்பர், 2013





திருப்பூர் மாவட்டம் மூலனூரில் பா.ம.க.வினர் 100 பேர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணையும் விழா மூலனூர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் மூலனூர் ஒன்றியத்தில் இருந்து சுமார் 100பேர் முன்னாள் பா.ம.க. ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு ரமேஷ்க்கு வழங்கப்பட்டது.

விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மூலனூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தார். வெள்ளகோவில் ஒன்றிய அமைப்பு செயலாளர் நேமிநாதன், தெற்கு ஒன்றிய தலைவர் ராமசாமி, பொருளாளர் ஈஸ்வரி, கன்னிவாடி பேரூர் செயலாளர் தர்மலிங்கம், தலைவர் குமரவேல், பேரூர் இளைஞரணி செயலாளர் கருப்புச்சாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுச்செயலாளர் காவேரி கலந்து கொண்டு பேசியது:

மூலனூர் ஒன்றிய பகுதிகளில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க அனைத்து பொறுப்பாளர்களும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP