Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

திங்கள், 23 டிசம்பர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் 22.12.2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.00 மணி அளவில் மேச்சேரி விஜயா மஹாலில் நடைபெற்றது.

பொதுக்குழுக் கூட்டத்துக்கு கட்சியின் மேற்கு மாவட்டச் செயலர் ஓ.கே.வீராசாமி தலைமை வகித்தார். மேச்சேரி ஒன்றியச் செயலர் ஜெகநாதன் வரவேற்று பேசினார். மாநிலப் பொதுச் செயலாளர் வை.காவேரி, மாநில அமைப்புச் செயலாளர் மே.ப.காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் செந்தில்குமார், மாநிலப் பொறுப்பாளர் சத்தியமூர்த்தி, சேலம் மாவட்டப் பொருளாளர் ஜமுனா, மாவட்ட இளைஞர் அணி தலைவர் கார்த்திக், சபரீஷ், செயலாளர் மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பிப்ரவரி 2-ஆம் தேதி சேலம் போஸ் திடலில் நடைபெறும் கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் 5ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP