Blogger இயக்குவது.

கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் போட்டியிட வேண்டும் - கடலூர் மாவட்ட மாணவரணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

வெள்ளி, 27 டிசம்பர், 2013

கடலூர் :

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட மாணவரணி செயற்குழு கூட்டம் கடலூரில் 26.12.2013 அன்று நடைபெற்றது.

செயற்குழு கூட்டத்திற்கு மாநில மாணவரணி துணை செயலாளர் அருள்பாபு தலைமை தாங்கினார். கிழக்கு மாணவரணி மாவட்ட செயலாளர் முத்துகுமார் முன்னிலை வகித்தார். மேற்கு மாணவரணி மாவட்ட செயலாளர் நவீன் அனைவரையும் வரவேற்றார். நிர்வாகிகள் வில்லியம்ஸ், ராம்பிரகாஷ், சத்தியஞானம், ஆனந்த், பிரபு, கார்த்திக், அன்பு விநாயகம், ராஜசேகர், ஜான்பால், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர மாணவரணி தலைவர் சங்கர், செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் போட்டியிட வேண்டும்.

2. கடலூர்–விருத்தாசலம் இடையே ரெயில்வே மேம்பாலம் விரைவாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

3. இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 210 தமிழக மீனவர்களை மத்திய அரசு தலையிட்டு விடுதலை செய்ய வேண்டும். மேலும் அவர்களுடைய படகுகள், உடமைகளையும் மீட்டெடுக்க வேண்டும்.

4. பிப்ரவரி 2–ந் தேதி சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 3–ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு மாணவரணி சார்பாக கடலூரில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பது

உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP