Blogger இயக்குவது.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தி.வேல்முருகன் தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தொடர் முழக்கப் போராட்டம்

திங்கள், 30 செப்டம்பர், 2013

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைநகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம்

தேதி: 02-10-2013
நாள்: புதன்கிழமை,
நேரம்: மாலை 4-00மணி,
இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,விழுப்புரம்

தலைமை:  

தி.வேல்முருகன், நிறுவனர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி

முன்னிலை:

ஏ.கே.மணி, ம.திமுக
எம்.ஆர்.குமரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி
மு.யா.முஸ்தாக்தீன், மமக
செ.தேசிங்கு, நாம் தமிழர் கட்சி

கண்டன உரை:

இராம.இரவிஅலெக்ஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி
வா.ச.சுரேஷ் குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி
பாபு கோவிந்தராஜ், மதிமுக
பிரபா.கல்விமணி, மகஇ
க.நடராசன், மதிமுக
எம்.முஜிபுர்ரஹ்மான், மமக



இலங்கையில் நடத்தப்படுகின்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்குபெற கூடாது என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் விருத்தாசலத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்ட மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

இனப்படுகொலை நடந்த இலங்கையில் நடத்தப்படுகின்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்குபெற கூடாது என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 29/09/2013 அன்று விருத்தாசலத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டன உரை ஆற்றினார். கண்டன பொதுக்கூட்டத்தில் மாநில பொது செயலாளர் காவேரி, மாநில துணைப் பொது செயலாளர் கருப்பு சரவணன், புதுவை மாநில அமைப்பாளார் ஸ்ரீதர், சின்னதுரை, மாநில இளைஞசரணித் தலைவர் ரவி பிரகாஷ், விருத்தாசல நகர செயலாளர் பி.ஜி சேகர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 























தியாகி தீபம் தீலிபன் நினைவு வணக்க நிகழ்வு - தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்பு

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

தியாகி தீபம் தீலிபன் நினைவு வணக்க நிகழ்வும், போர்க்குற்றவாளி இராஜபக்சே நடத்தும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது ஏன்? விளக்கப்பொதுக்கூட்டம் 26/09/2013 சென்னை லாயிஸ் சாலை, வி.எம்.தெரு சந்திப்பு, ராயப்பேட்டையில் மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ , தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் இராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். 













புதுவை வந்த குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம்

புதன், 25 செப்டம்பர், 2013

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழக–புதுவை மீனவர்களை மீட்கவேண்டும், காமன் வெல்த் மாநாட்டிலிருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும், இலங்கைக்கு போர்கப்பல் வழங்க கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாணவர் கூட்டமைப்பு சார்பில் புதுவை வரும் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.

இன்று (25/09/2013) காலை 8 மணியளவில் லாஸ்பேட்டை விமான நிலையத்திலிருந்து புதுவை பல்கலைக்கழகம் செல்லும் வழியில் குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜிக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி புதுவை மாநில தலைவர் ஸ்ரீதர், புதுவை மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன், பெற்றோர்–மாணவர் சங்க தலைவர் ராஜ்பவன் வை.பாலா, சட்டக்கல்லூரி மாணவர்கள் கவுதம பாஸ்கரன், இதயவேந்தன் மற்றும் தந்தைபிரியன், ராஜா உள்பட 50க்கும் மேற்பட்டோரை ஒதியஞ்சாலை போலீசார் அண்ணாசிலையருகே அவர்களை கைது செய்தனர்.

Pages (26)123456 Next

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP