Blogger இயக்குவது.

சேலத்தில் நடைபெறும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில மாநாட்டில் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் சார்பில் 500 வாகனங்களில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொள்ள முடிவு

திங்கள், 17 பிப்ரவரி, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மாநில துணை பொதுசெயலாளர் ராம.ரவிஅலெக்ஸ் தலைமை தாங்கினார். தொழிற்சங்க மாநில பொருளாளர் பன்னீர்செல்வம், மாநில துணைத்தலைவர் சசி, மாவட்ட தலைவர் பால முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் குமரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழர்படை மாநில தலைவர் ஜோதிலிங்கம், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சின்னதுரை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாவட்ட இளைஞரணி தினேஷ், மாணவரணி தீனா, சிலம்பரசன், ஒன்றிய செயலாளர்கள் சுதாகர், அய்யனார், ஜெகதீசன், மணி, சேட்டு, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

செயல்வீரர்கள் கூட்டத்தில் சேலத்தில் 23.02.2014 அன்று நடைபெறும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில மாநாட்டில் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் சார்பில் 500 வாகனங்களில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP