Blogger இயக்குவது.

அரியலூர் மாவட்ட இளம்புயல் பாசறை சார்பில் மீன்சுருட்டி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம்

திங்கள், 10 பிப்ரவரி, 2014

அரியலூர் மாவட்ட இளம்புயல் பாசறை சார்பில் மீன்சுருட்டி அரசு மருத்துவமனையில் நேற்று 09.02.2014 (ஞாயிற்றுக்கிழமை) ரத்ததான முகாம் நடைபெற்றது. இரத்ததான முகாமில் அரியலூர் மாவட்ட இளம்புயல் பாசறை செயலாளர் மீன்சுருட்டி க.சிட்டிராஜா தலைமை தாங்கினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில மாணவரணி தலைவர் ரவிபிரகாஷ், மாநில துணைப் பொது செயலாளர் கருப்பு சரவணன், அரியலூர் மாவட்ட செயலாளர் வே.சாமிநாதன், குமராட்சி தமிழ்வாணன், அண்ணா பகுத்தறிவு உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த ரத்ததான முகாமில் அரியலூர், கடலூர், நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர்.













0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP