Blogger இயக்குவது.

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி்.வேல்முருகன் இரங்கல்

புதன், 24 டிசம்பர், 2014

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி்.வேல்முருகன் இரங்கல்   தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி்.வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

தமிழ்த் திரை உலக மேதை இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் மறைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.

தமிழ்த் திரை உலகத்துக்கு ஏராளமான கலைஞர்களை அறிமுகம் செய்தவர் இயக்குநர் சிகரம் பாலசந்தர். மனித உறவுகள், சமூக பிரச்சனைகளை தமது படத்தில் அழகாக வெளிப்படுத்திய திரை உலக மேதை பாலசந்தர்.

இயக்குநராக, திரைவசன கர்த்தாவாக, தயாரிப்பாளராக திரை உலகில் தம் பன்முகங்களை வெளிப்படுத்திய பாலசந்தரின் மறைவு தமிழ்த் திரை உலகத்துக்கு பேரிழப்புதான்.

இன்று நம்மைவிட்டு இயக்குநர் கே.பாலசந்தர் பிரிந்திருந்தாலும் அவரது புகழ் என்றென்றும் இந்த மண்ணில் நிலைத்திருக்கும்.

திரை உலகில் சிகரத்தை தொட்ட இயக்குநர் கே.பாலசந்தரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும் தமிழ்த் திரை உலகத்துக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP