Blogger இயக்குவது.

தமிழக அரசியல் கட்சி தலைவர்களை தொடர்ந்து அவதூறாக பேசி வரும் சுப்பிரமணிய சாமியை தமிழகத்தில் நுழைய தடை விதிக்க வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன்

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

தூத்துக்குடி: 

தமிழக அரசியல் கட்சி தலைவர்களை தொடர்ந்து அவதூறாக பேசி வரும் சுப்பிரமணிய சாமியை தமிழகத்தில் நுழைய தடை விதிக்க  வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார். 

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன்  தூத்துக்குடியில் அளித்த பேட்டி: 

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜ அரசு தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.  மக்களுக்காக போராடும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களை பாஜவினர் ஒருமையில் பேசி வருகின்றனர். அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும்  எடுக்கவில்லை. சுப்பிரமணியசாமி, ஜெயலலிதாவின் ஜாமீனை ரத்து செய்துவிடுவேன் என்று மிரட்டி வருகிறார். அவர் தொடர்ந்து தமிழக  தலைவர்களை அவதூறாக பேசி வருவதோடு, இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே அரசிற்கு ஆதரவாக பேசி வருகிறார். இதனால்  தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே அவர் தமிழ்நாட்டிற்குள் நுழைய தடைவிதித்து, அவரை கைது செய்ய வேண்டும். 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP