Blogger இயக்குவது.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் ரயில் மறியல் போராட்டம்

திங்கள், 11 நவம்பர், 2013

புதுக்கோட்டை:

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கட்சி சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை செவ்வாய்கிழமை (12.11.2013) ரயில் மறியல் போராட்டம்:

புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் சாந்தநாதபுரத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னத்தம்பி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் திருமுருகன் வரவேற்றார். இதில் மாநில துணை பொதுச் செயலாளர் சரவணதேவா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் மலையப்பன், சாந்தகுமார், மாலா, மாரியப்பன், கோவிந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கந்தர்வக்கோட்டை ஒன்றிய அமைப்பாளர் தர்மராஜ் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :


1. ராஜபக்சே தலைமையில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் மத்திய அரசு பங்கேற்க கூடாது.

2. இலங்கை சிறையில் வாடும் அப்பாவி தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும். இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்க கூடாது

3. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை செவ்வாய்கிழமை (12.11.2013) கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் ஆணைக்கிணங்க ரயில் மறியல் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP