Blogger இயக்குவது.

நஷ்டத்தில் இயங்கும் சக்கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்

திங்கள், 21 ஜூலை, 2014

மிழக வாழ்வுரிமைக் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் 20.07.2014 (ஞாயிற்றுக்கிழமை) அன்று  நடைபெற்றது. மாநில துணைப் பொதுச் செயலர் ராம.ரவி.அலெக்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எம்.ஆர்.குமரன் வரவேற்றார். கூட்டத்தில் தலைமை நிலைய செயலர் கனல் உ.கண்ணன், மாநில தமிழர் படைத் தலைவர் கி.ஜோதிலிங்கம், சுரேஷ் குமார், ராஜேஷ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:


1. சென்னை மெளலிவாக்கம் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவிப்பது.

2. காவிரி நடுவர் தீர்ப்பாணையம், முல்லைப் பெரியாறு அணை உயர்த்துதல் போன்றவற்றில் உரிய நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு இக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிப்பது,

3. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்குவதையும், மீன்பிடி வலைகளை அறுப்பதையும், சிறைப் பிடிப்பதையும், வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. இச செயலை முற்றிலுமாக தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது,

4. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் எனக் வலியுறுத்தப்பட்டது.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP