Blogger இயக்குவது.

சீர்காழி அருகே திருநகரியில் ஓ.என்.ஜி.சி. சார்பில் மீத்தேன் எடுக்கும் முயற்சியை உடனடியாக கைவிட நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

திங்கள், 14 ஜூலை, 2014

நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புத்தூரில் 13.07.2014 அன்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சிவா தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து, மாவட்ட துணை செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தி வரவேற்றார். மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்புசரவணன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ராமகுமரகுரு, எழிலரசன், தீபன், பாரி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் புதுராசா நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. சீர்காழி அருகே திருநகரியில், ஓ.என்.ஜி.சி. சார்பில் மீத்தேன் எடுக்கும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும். விளைநிலங்கள் வீட்டு மனைப்பட்டாவாக மாறிவருவதை தடுக்கவும், இடைதரகர்களாக செயல்படுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசை கேட்டுக் கொள்வது.

2. பெரம்பூரில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடிக்கம்பத்தை அகற்றியவர்கள் மீது ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சிதம்பரம் - சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் புத்தூரில் சாலை மறியலில் ஈடுபடுவது.

3. விவசாயிகள் வாங்கிய பழைய கடனை தள்ளுபடி செய்து, புதிய கடன் வழங்க அரசை கேட்டுக் கொள்வது.

4. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள குளம், குட்டைகள், பாசன வாய்க்கால்கள், ஏரிகள் ஆகியவைகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, பழைய நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க அரசைக் கேட்டுக் கொள்வது.

5. கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் வாங்கிய மற்றும் திரும்ப செலுத்திய கடன் விவரங்கள், அடமானம் பெற்றுள்ள நகைகள் தரமானதாக உள்ளனவா? போன்ற விவரங்கள் கூட்டுறவு வங்கியின் கணக்கு வழக்கு விவரங்கள் ஆகியவற்றை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், அந்தந்த வங்கியில் ஒட்டி விளம்பரம் செய்ய கேட்டுக்கொள்வது.

6. கல்லணையில் இருந்து காட்டூர் வரை போடப்பட்டுள்ள கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், மீண்டும் தரமான தார்சாலை அமைக்க பொதுப்பணித்துறையை கேட்டுக் கொள்வது.

7. நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள் தோறும் கட்சி கொடி ஏற்றுவது.

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP