Blogger இயக்குவது.

மேட்டூர் அணையில் திறந்து விடும் உபரி நீரை வசிஷ்ட நதியில் செல்லும் வகையில் வாய்க்கால் அமைக்க தமிழக வாழ்வுரிமை கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

திங்கள், 28 ஜூலை, 2014

தமிழக வாழ்வுரிமை கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், ஆத்தூர் டி.ஜி.ஆர்.திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில பொதுச் செயலாளர் வை.காவேரி, தலைமை செயலாளர் உ.கண்ணன், மாநில தமிழர் படைஜோதிலிங்கம் ஆகியோர், கட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது குறித்து பேசினர். ஆத்தூர் நகர செயலாளர் துரைராஜ், ஒன்றிய செயலாளர்கள் வாழப்பாடி பச்சமுத்து, பெத்தநாயக்கன்பாளையம் வெங்கடேசன், ஆத்தூர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி பகுதியை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

1. மேட்டூர் அணையில் திறந்து விடும் உபரி நீர், வீணாக கடலில் கலப்பதால், உபரி நீரை, வசிஷ்ட நதியில் செல்லும் வகையில் வாய்க்கால் அமைத்தால், சேலம், விழுப்புரம், கடலூர் மாவட்ட விளை நிலங்கள் பாசனம் மற்றும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண முடியும்.

2. கரியக்கோவில் அணையில், கோடை காலத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டு விடுவதால், கைக்கான் வலவு நீரோடையை, கரியக்கோவில் அணைக்கு செல்லும் வகையில், புதிய நீரோடை அமைத்தால், அதிகளவில் தண்ணீர் தேக்க முடியும்

உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP