Blogger இயக்குவது.

புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலெட்சுமி பெயரில் மருத்துவக்கல்லூரி அமைத்து தர புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

சனி, 12 ஜூலை, 2014

புதுக்கோட்டை: 

 புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று (11.07.2014) நடைபெற்றது. 

மாவட்ட செயலாளர் பாபு வரவேற்றார். மாவட்ட தலைவர் சின்னத்தம்பி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் (தெற்கு) பழனியப்பன், பெருநகர செயலாளர் அப்புக்குட்டி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மனோஜ், துணை செயலாளர் மாரியப்பன், மகளிரணி செயலாளர் மாலாஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைப் பொதுச் செயலாளர் சரவணதேவா துவக்க உரையாற்றினார். இதில் தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் தி.திருமால்வளவன், தலைமை நிலைய செயலாளர் உ.கண்ணன், மாநில துணைப் பொதுச் செயலாளர் தஞ்சை தமிழ்நேசன், மாநில தமிழர் படை தலைவர் ஜோதிலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

 மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 

 1. புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமி பெயரில் மருத்துவக்கல்லூரி அமைத்து தர வேண்டும்

 2. புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் 

 3. புதுக்கோட்டை நகரத்திற்கு உட்பட்ட காமராஜபுரம், மச்சுவாடி, போஸ்நகர், ஜுவாநகர், நரி மேடு, தைலாநகர், புதுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு மினி பேருந்து வசதி செய்துதர வேண்டும். 

 4. புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாறு, குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவில் முடித்து குருக்கே தடுப்பணைகளை ஏற்படுத்தி புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.

 என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP