Blogger இயக்குவது.

நபிகள் நாயகத்தின் நெறிகளை ஏற்று சகோதரத்துவமும் சமூகங்களிடையேயான ஒற்றுமை நிலைக்கவும் ரமலான் திருநாளில் உறுதியேற்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களின் ரமலான் பெருநாள் வாழ்த்துச்செய்தி

செவ்வாய், 29 ஜூலை, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் விடுத்துள்ள ரமலான் பெருநாள் வாழ்த்துச் செய்தி:

ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பெருநாளை கொண்டாடுகிற இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமிய உறவுகளின் புனிதக் கடமைகளில் ஒன்றாக ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. அன்பு, ஈகை, நல்லிணத்துக்குடன் வாழ வேண்டும் என்பது நபிகள் நாயகத்தின் போதனை. இதை நாம் என்றென்றும் கடைபிடிக்க ரமலான் திருநாளில் உறுதியேற்போம்.

ரமலான் பெருநாளில் ஈழத்தில், பாலஸ்தீனத்தில் என இஸ்லாமிய உறவுகள் வேட்டையாடப்படுகிற பெருந்துயரம் முடிவுக்கு வரவும் பிரார்த்திப்போம். மனித நேயம் மலரவும் ஒடுக்கப்படுகிற மக்கள் தங்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க குரல் கொடுக்கவும் இந்த ரமலான் திருநாளில் சூளுரைப்போம். அண்ணல் நபிகள் நாயகத்தின் நெறிகளை ஏற்று சகோதரத்துவமும் சமூகங்களிடையேயான ஒற்றுமை நிலைக்கவும் ரமலான் திருநாளில் உறுதியேற்போம்.

இந்நன்னாளில் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP