Blogger இயக்குவது.

தமிழக அரசு சார்பில் உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகள் அமைக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நீலகிரி மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

வியாழன், 24 ஜூலை, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நீலகிரி மாவட்ட செயற்குழுக் கூட்டம், கோத்தகிரியில் நடைபெற்றது.

மாநில துணைத் தலைவர் பி.அழகு தலைமை வகித்தார். தென் மண்டலப் பொறுப்பாளர் ஆர்.பி.தமிழ்நேசன், மாநில தமிழர் படைத் தலைவர் கி.ஜோதிலிங்கம், மாநில தொழிற் சங்கத் தலைவர் கே.வி.சிவராமன் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்புச் செயலாளர் சுதாகர் வரவேற்றார். கட்சியின் தலைமை நிலையச் செயலர் உ.கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஒன்றிய அமைப்பாளர்கள் பாபு, பஷீர், ராமச்சந்திரன், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றியத் தலைவர் சேகர், செயலாளர் சோமசுந்தரம் நன்றி கூறினர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள்:
1. நீலகிரி மாவட்டத்தில் ஏழை மற்றும் ஆதிவாசி மக்களுக்கு இலவச மரக்கன்றுகளை தரமானதாக வழங்க வேண்டும்.

2. நெடுகுளா கிராமத்தில் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கவும், அப்பகுதியில் வன விலங்குகள் தொல்லை அதிகம் இருப்பதால் தெரு விளக்குகள் அமைக்கவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. தமிழக அரசு சார்பில் உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகள் அமைக்க வேண்டும்

என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP